Wednesday, July 31, 2013

அரை மணி நேரம் 50 ரூபாயில் அழகாக வரைந்து கொடுத்து விடுகிறார்

இன்று மெரினா பீச்சில்
ஒரு திறமைமிக்க
மனிதரை பார்த்தேன்.

அரை மணி நேரம் அவர்
முன் உட்கார்ந்தால்,
நம்மை அவ்வளவு அழகாக
வரைந்து கொடுத்து
விடுகிறார், 50 ரூபாயில்.

இதில் என்ன
இருக்கிறது என்று தான
ஆச்சர்யம் என்னவென்றால் ,அவர் ஒரு software engineer.


தற்போது பணியில்
இல்லை,
பல்வேறு உள்ளடி
வேலையால்
பணி இழந்து இருக்கிறார்.
மீண்டும் அந்த
பணிக்கு போகவேண்டும்என்று
விருப்பமில்லை...

அனிமேஷன் இல்
பணிபுரிந்து
விட்டு , கை நிறைய
சம்பளம் வாங்கிவிட்டு,
இந்த தொழிலுக்கு ஏன்
வந்தீர்கள் என்று
கேட்டதற்கு?

உள்ளே பணிபுரிவதற்கு
சவால்கள் இருக்கிறது.
இதில், பல அரசியல் வேற,
அதையெல்லாம் தாண்டி,
நிலைத்து நிற்க
நேர்மை மட்டும் பத்தாது.
அதான் வேலையை
விட்டு விட்டேன் என்றார்.

சரி இதில் என்ன
வருமானம்
வருகிறது என்று
கேட்டதற்கு,

வரைவதற்கு 100 ரூபாய்
கேட்கலாம் .
ஆனால்
வேடிக்கை மட்டும்
பார்த்துவிட்டு சென்று
விடுகிறார்கள் .
ஆகையால் 50
ரூபாய்க்கு வரைந்து
கொடுக்கிறேன் என்றார்.

சின்ன
குழந்தைகளுக்கு ஓவிய
பயிற்சி கொடுக்க
போகிறேன், அதற்கான
சந்தர்பம் வந்தால், என்
நிலைமை மாறிவிடும்.

தினந்தோறும்
சாப்பிடணுமே
என்ன பண்றது, அதற்காக
தான் இங்கே வந்து
வரைந்து கொடுக்கிறேன்
என்றார்.

திறமையானவர்கள்
நிலைமை, அதிலும்
கொஞ்சம
நேர்மை. சரிபட்டு வராது,
வாழ்க்கையில் ரொம்பவே
போராடனும் .
அவரை பார்த்த
பொழுது இது மட்டும்
தான் தோன்றியது.

அவர் என்னை வரைந்த
பொழுது, ஒரு இடத்தில
கூட ரப்பர்
பயன்படுத்தவில்லை.
அவ்வளவு
அழகாக என் மனதில் ,
ஓவியம்
வரைந்துகொண்டே
இருந்தார்.

அவரை தொடர்பு கொள்ள
வேண்டுமென்றால்,
சென்னைவாசிகள் இந்த
எண்ணிற்கு தொடர்பு
கொள்ளுங்கள்.
உங்கள்
ஒத்தழைப்பு இருந்தால்,
நல்ல திறமைசாலி ,
நேர்மையானவர் , நல்ல
நிலைமைக்கு வருவார்.

அவர் பெயர் சுரேந்தர்.
அவர் எண்: 9150270159.

மெரினா பீச்சில், சாயந்தரம்
4 மணிக்கு மேலே
சுரேந்தர் இருப்பார்.

No comments:

Post a Comment