Thursday, October 31, 2013

லிம்கா சாதனையில் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ limca world record movie

லிம்கா சாதனையில் 'என்ன சத்தம் இந்த நேரம்'

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளைப் பற்றிய படமான 'என்ன சத்தம் இந்த நேரம்' படம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது.

சத்தம் போடாதே, ராமன் தேடிய சீதை படங்களில் நடித்த நிதின் சத்யா சின்ன இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாகும் படம் என்ன சத்தம் இந்த நேரம்.

ஹைதராபாத் மற்றும் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இந்தப் படம் தயாராகியுள்ளது. ஏவி புரொடக்‌ஷன் சார்பில் ஏவி அனூப் தயாரிக்க இப்படத்தை குரு ரமேஷ் இயக்கியுள்ளார்.

உயிரியல் பூங்காவுக்கு வரும் நான்கு சகோதரிகள் தொலைந்து போகிறார்கள். பூங்கா பாதுகாவலரான நிதின் சத்யா ஒரேநாளில் அவர்களை தேடி கண்டு பிடிப்பது தான் கதை.

இந்தப் படத்தின் முக்கிய விடயம் என்னவென்றால் முன்னணி இயக்குனர் ஜெயம் ராஜா முக்கிய பாத்திரத்தில் நடிப்பதுதான். அவருடன் காதல் மன்னன் புகழ் மானுவும் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

ஒரு படத்தில் ஒரே நேரத்தில் பிறந்த நான்கு சகோதரர்கள் நடிப்பதும் இதுதான் முதல்முறையாம். இதனால் இப்படத்தினை லிம்கா சாதனைக்கு விண்ணப்பித்தார்கள்.

படப்பிடிப்பு இடத்திற்கு சென்று ஆய்வு செய்த லிம்கா குழுவினர், லிம்கா சாதனைப் புத்தகத்தில் படத்தை இடம் பெற சம்மதித்தனர்.

அதன்படி இன்று படக்குழுவினரைச் சந்தித்து அதற்கான சான்றிதழை அளிக்க இருக்கிறார்கள்.

shared via

Tuesday, October 29, 2013

ஓரே சாட்டில் தயாரிக்கப்பட்ட அகடம் திரைப்படம் agadam movie

ஓரே சாட்டில் தயாரிக்கப்பட்ட அகடம் திரைப்படம்

கின்னஸ் உலக சாதனைத் திரைப்படம் 'அகடம்' அடுத்த மாதம் நவம்பர் 15-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்திய சினிமா நூற்றாண்டு காணும் இந்த வேளையில் ஓரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 'அகடம்'.

எண்ணற்ற உலக சினிமா விரும்பிகளின் கவனத்தைத் திருப்பிய இப்படம் வெளியாவதில் அகடம் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

அகடம் முழு திரைப்படமும் தொடர்ந்து 2 மணிநேரம் 3 நிமிடங்கள் 30 வினாடிகள் எவ்வித கட், ரீடேக் எதுவும் இல்லாமல் படமாக்கப்பட்டதுதான்.

சமூக சிந்தனையுள்ள இப்படம் முழுவதும் ஒரே இடத்தில் திகிலூட்டும் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகளால் யு/எ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

சமீபத்தில், இளம் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் 'அசிஸ்ட் வேர்ல்ட் ரிகார்ட்ஸ் எனும் பிரபலமான நிறுவனம் அதன் ஆண்டுவிழாவில் அகடம் படக்குழுவினரை சாதனைச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவப்படுத்தியது.

'கின்னஸ் உலக சாதனை' நிறுவனம் ஏற்கனவே இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகர்களை வைத்து தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உலக சாதனைப்படத்தை கன்னடம் மற்றும் இந்தி பட உலகிற்கும் கொண்டுசெல்லும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

திரைப்படத்திற்கும், நாடகத்திற்கும் சில இலக்கணங்கள் உண்டு, ஒரே சாட்டில் ஒரு படம் எடுக்கப்பட்டால் அது நாடகமாகவே அமையுமே அல்லாமல் திரைப்படமாக அமையாது என்பது கவனிக்கத்தக்கது.

shared via

Sunday, October 27, 2013

8 1/4 அடி உயர கின்னஸ் வாலிபருக்கு விரைவில் திருமணம் Tallest man in world to marry soon

8 1/4 அடி உயர கின்னஸ் வாலிபருக்கு விரைவில் திருமணம் Tallest man in world to marry soon

இஸ்தான்புல், அக். 28-

2.51 மீட்டர் (8 1/4 அடி) உயரத்துடன் உலகின் மிக உயரமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளவர் சுல்தான் கோசென். துருக்கி நாட்டில் வாழும் விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் பருவத்தே பயிர் செய்ய விரும்பி தகுந்த பெண்ணை தேடி வந்தார்.

ஆனால், இவரது உயரத்தை கண்டு மிரண்ட பல பெண்கள் இவருக்கு கழுத்தை நீட்ட மறுத்து விட்டனர். தேடித்தேடி அலுத்துப்போய், இனி காலம் முழுவதும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து விடலாம் என முடிவெடுத்த சுல்தான் கோசென், தற்போது தனது 30வது வயதில் மெர்வோ டிபோ என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

முதல் சந்திப்பிலேயே, கண்ணும் கண்ணும் ஒட்டிக்கிச்சு.. காதல் வந்து பத்திக்கிச்சு என்ற உணர்வு மெர்வோ டிபோவை வாட்டி வதைக்க சுல்தான் கோசென்-னை திருமணம் செய்துக் கொள்ள அவர் சம்மதித்துள்ளார். பொறுத்தது போதும் - பொங்கி எழு என்ற ரீதியில் சுல்தான் கோசென் அவசர கதியில் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

தன்னை விட 2 1/2 அடி (30 அங்குலம்) உயரம் குறைவான காதலியை மணம் முடிக்கும் விழாவுக்கு ஏராளமான வி.ஐ.பி.க்களையும் இவர் அழைத்துள்ளார்.

திருமண உடைகள் உள்ளிட்ட எல்லா வேலையையும் முடித்து விட்ட சுல்தான் கோசென் மனைவியை அழைத்துக் கொண்டு ஊர்வலம் போக உயரமான காரை தேடிக் கொண்டிருக்கிறார்.

...

shared via

உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் திறப்பு dubai opens worlds largest airport

உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் திறப்பு dubai opens worlds largest airport

துபாய், அக். 28-

பிரபல சுற்றுலா நகரமாக திகழும் துபாயில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் நேற்று திறக்கப்பட்டது.

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் 2010 ஜுன் மாதத்தில் இருந்து சரக்கு போக்குவரத்து மட்டுமே கையாளப்பட்டு வந்தது.

இங்கிருந்து 50 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பழைய விமான நிலையத்தை கடந்த (2012) ஆண்டில் மட்டும் சுமார் 5 3/4 கோடி பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.

கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத அல் மக்தூம் விமான நிலையத்தில் நேற்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்கியது.

பணிகள் நிறைவடைந்த பின்னர் 5 ஓடுபாதைகள் கொண்ட இந்த புதிய விமான நிலையம் ஆண்டுக்கு 16 கோடி பயணிகளையும் 1.2 கோடி டன் சரக்குகளையும் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

...

shared via

இந்தியன் கிரண்ட் பிரீ சாம்பியன்சிப் கோப்பையை வென்று வெட்டல் ஹாட்ரிக்ஸ் சாதனை Sebastian Vettel wins 3rd Indian Grand Prix

இந்தியன் கிரண்ட் பிரீ சாம்பியன்சிப் கோப்பையை வென்று வெட்டல் ஹாட்ரிக்ஸ் சாதனை Sebastian Vettel wins 3rd Indian Grand Prix

புதுடெல்லி, அக். 27-

உலகின் மிக பிரபலமான கார் பந்தயம் பார்முலா 1 கார் பந்தயமாகும். 19 சுற்றுகலாக நடத்தப்படும் இப்போட்டியின் 16-வது சுற்றான இந்தியன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயம் இன்று டெல்லி கிரேட்டர் நொய்டாவில் நடந்தது.

2011-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் இரண்டு போட்டிகளிலும் செபஸ்டியன் வெட்டலே வெற்றி பெற்று இருந்தார். இந்நிலையில் இன்று நடந்த இப்போட்டியிலும் ரெட் புல் அணி சார்பக கலந்துகொண்ட ஜெர்மனியின் இளம் வீரர் செபாஸ்தியன் வெட்டல் அதிக புள்ளிகள் பெற்று இந்தியன் கிராண்ட் பிரீ சாம்பியன்ஸ் கோப்பையை
தொடர்ந்து மூன்றாவது முறையாக தட்டி சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் அவர் ஹாட்ரிக்ஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். இரண்டாவது இடத்தை மெர்சிடிஸ் அணியை சேர்ந்த ரோஸ்பெர்க்கும், மூன்றாவது இடத்தை லோடஸ் அணியை சேர்ந்த குரோஸ்ஜீனும் பெற்றனர்.

தொடர்ந்து 4 உலக சாம்பியன் கோப்பைகளை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இச்சாதனையை ஜுவான் மேனுவல் பேங்கியோவும், மைக்கேல் சூமேக்கரும் செய்துள்ளனர்.

...

shared via

Thursday, October 24, 2013

தர்மபுரி: முதல் முறையாக பட்டப்படிப்பு படிக்கும் நரிக்குறவர் இன மாணவி Dharmapuri The first time graduate student studying narikuravar

தர்மபுரி: முதல் முறையாக பட்டப்படிப்பு படிக்கும் நரிக்குறவர் இன மாணவி Dharmapuri The first time graduate student studying narikuravar

தர்மபுரி, அக். 25-

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா எச்.தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்கி (வயது 18) என்ற நரிக்குறவர் இன மாணவி தர்மபுரி மாவட்டத்திலேயே முதல் முறையாக பிளஸ்-2 வகுப்பில் தேர்சசி பெற்று பட்டப்படிப்பை எட்டிப் பிடித்துள்ளார்.

அரூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்த இவர் பிளஸ்-2 தேர்வில் 940 மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றர். இவருக்கு தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.காம். படிப்பில் இடம் கிடைத்தது. இந்த கல்லூரியில் சேர்ந்த அவர் தர்மபுரியில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இதுதொடர்பாக மாணவி கல்கி கூறியதாவது:- நான் சிறுமியாக இருந்த போது எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கு செல்வதே மிகவும் அரிது. இருந்தபோதிலும் பிற சிறுவர் - சிறுமிகளை போல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என நான் அடம் பிடித்ததால் என்னை அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பெற்றோர் சேர்த்தனர்.

பல்வேறு தடைகளை சந்தித்த போதும் அவற்றை சமாளித்து நன்றாக படித்த எனக்கு இப்போது அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தபின்னரும் கல்லூரி மாணவ - மாணவிகள் என்னிடம் சகஜமாக பழகுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள எங்கள் இனத்தை சேர்ந்தவர்களிடையே கல்வி தொடர்பான விழிப்புணர்வை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்கால லட்சியம். நான் பட்டப்படிப்பை முடித்த பின்னர் வக்கீலுக்கு படிக்க விரும்புகிறேன் .

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

Friday, October 18, 2013

நுரையீரல் புற்று நோய் : டீடெய்ல் ரிப்போர்ட்! Cancer

நுரையீரல் புற்று நோய் : டீடெய்ல் ரிப்போர்ட்!

நாய் நன்றியுள்ள பிராணி, செல்ல பிராணி, மோப்பம் பிடிக்கும், குற்றவாளிகளை அடையாளம் காட்டும், வேலை செய்யும், வீட்டை காக்கும் இப்படிதான் சொல்கின்றனர். ஆனால், மனிதர்களின் மூச்சுக்காற்றை வைத்து நுரையீரல் புற்றுநோயை கூட கண்டுபிடித்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

நாய்களை வைத்து ஜெர்மனியில் உள்ள சில்லர்ஹோகி மருத்துவமனை விஞ்ஞானிகள் பல ஆண்டாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மனிதர்களை பாதிக்கும் நோய்களை மருத்துவக் கருவிகள் மூலம் கண்டறிவது போல், நாய்கள் மூலம் நோய் பாதிப்பை கண்டறிய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்த போது மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத வாசனையை கூட மோப்ப ஆற்றலால் நாய்கள் கண்டுபிடிக்கின்றன. சரியான பயிற்சி அளித்தால் மனிதர்களின் நோய் பாதிப்பை கூட ஆரம்பத்திலேயே நாய்கள் கண்டுபிடித்து விடும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக புற்றுநோயை நாய்கள் துல்லியமாக கண்டுபிடிக்கின்றன. புற்றுநோய் பாதித்த மனிதர்களின் மூச்சுக் காற்றுக்கும், ஆரோக்கியமான மனிதர்களின் மூச்சுக் காற்றுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. புற்றுநோய் பாதித்தவர்களின் மூச்சு காற்றில் உள்ள ரசாயன வாசனையை வைத்து மோப்ப நாய்கள் நோயாளியை கண்டுபிடிக்கின்றன என்று தெரிய வந்தது.

இதற்கிடையில் புற்று நோய் வகைகளை நாம் அறிந்து கொள்ளும் முன் நுரையீரலின் அனாடமி எப்படி செயல்படுகிறது போன்றவை பற்றி அறிதல் முக்கியம்.

நுரையீரல் உடலுக்கு சக்தியை தரும் ஆக்சிஜனை எடுத்துக் கொள்வதிலும் கரியமிலவாயுவை வெளியேற்றுவதிலும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22 ஆயிரம் முறை மூச்சு விடும் நாம், கிட்டத்தட்ட 9 ஆயிரம் முறை காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.

மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும காற்று, காற்று குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. காற்றுக் குழாய் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது.

இரண்டாக பிரியும் பிரான்கியல் குழாய்கள் பல நுண் கிளைகளாக பிரிந்து அல்வியோல் எனப்படும் காற்றுப் பைகளில் முடியும். பல நுண்ணுயிர்க்குழாய்களாக பிரிந்து இருக்கும். அல்வியோலை எனப்படும் காற்றுப் பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டது.

இதில் பல நுண்ணிய ரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமணி மூலமாக வந்த கரியமிலவாயு நிறைந்த ரத்தத்தில் உள்ள கரியமிலவாயு வெளியேறி, ஆக்சிஜனை ஏற்றுக் கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது.

பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற திரவம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக் குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற நாம் அறியாமலே அவற்றை விழுங்கி விடுகிறோம்.

உடல்நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கிலேயே உள்ள ரோமம் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் ஆகியவை நீக்குதலிலும் ஈடுபடும்.

புற்றுநோய்க்கான புற காரணிகள்:-

காற்றில் உள்ள தூசு, இயந்திரங்கள் வெளியேற்றும் புகை, சிகரெட் புகை ஆகியவை ஆச்பெச்டாஸ் போன்றவை நுரையீரல் புற்றுநோய் வர முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

சில வீடுகளில் புகை நிறைந்த எரிபொருள் சமைக்க பயன்படுத்துவது காற்றினை மாசுபடுத்துகிறது. குளிர் காலத்தில் இதுபோன்ற புகை வீட்டிற்குள்ளேயே சுற்றுவதால் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்த வரையில் என் வீட்டிலேயே பலவகை எரிபொருட்களை பயன்படுத்தி இருக்கிறோம். (காகிதம், மரத்தூள், விறகு, வரட்டி பின் கெராசின் என்று பல பொருட்களை பயன்படுத்தி இருக்கிறோம்) இன்னும் சில பெண்கள் புகையை ஊதுகுழலை வைத்து ஊதி கண்சிவக்க இருமுவதையும், புகையை உள்ளிழுப்பதையும காணலாம்.

இதற்கு அடுத்தப்படியாக கட்டிடங்கள் கட்டிய பின்வரும் தூசிகள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை துணுக்கள் என்று பலவும் உடல்நலத்தை பாதிக்கிறது. வீடுகளில் உள்ள காற்றில் கலந்திருக்கும் பொருட்களில் கார்பன் டை ஆக்சைடு, பார்மால்டிஹைட், நைட்ரஜன் பெராக்சைடு, கார்பன் மோனோ ஆக்சைடு, ரேடான் எனப்படும் ரேடியோ கதிர்வீச்சு, பாசி, என்னும் நுண்ணுயிர் கிருமிகளின் முட்டைகள் என்பன சில முக்கியமானவை ஆகும்.

ஒருவர் புகை பிடிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் காற்றின் விளைவால் வருடத்திற்கு 1,50,000 குழந்தைகள் முற்றிய நுரையீரல் நோயால் பாதிக்கப்படுவதோடு ஆண்டொன்றுக்கு 3 ஆயிரம் குழந்தைகள் இறக்கிறார்கள்.

உலகளவில் இது இன்னமும் அதிர்ச்சியூட்டும் எண்களை தரலாம். புகை பிடிப்பவரின் அருகில் இருப்போருக்கு கண் எரிச்சலும், இருமலும் ஏற்படுகிறது. இவர்களையும் மருத்துவ உலகு அழைக்கிறது.

இதற்கிடையில் நுரையீரல் புற்று நோய்க்கு காற்று மாசுபடுவதே காரணம் என தற்போது உலக சுகாதார மையம் அறிவித்துள்ளதும இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகி விட்டது. அதாவது நுரையீரல் புற்று நோயினால் ஆண்டுக்கு 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்ற தகவல் 2010–ம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. எனவே சர்வதேச புற்று நோய் ஆராய்ச்சி கழகம் இந்த நோய் எதனால் ஏற்படுகிறது. என கண்டறிய சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.

அதன் ஆய்வறிக்கை 5 கண்டங்களை சேர்ந்த 1000 நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் பெரும்பாலானவை காற்று மாசுபடுவதே நுரையீல் புற்று நோய் வர காரணம் என தெரிவித்துள்ளது.

தற்போது தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. அதில் இருந்து வெளியாகும் ரசாயன நச்சு கழிவுகள் காற்றில் கலக்கின்றன. அவற்றை சுவாசிப்பதன் மூலம் நுரையீரல் புற்று நோய் ஏற்படுகிறது.

காற்றில் பரவியுள்ள மாசுவே இந்த புற்று நோய் ஏற்பட தூண்டுகோலாக உள்ளது. காற்றின் மாசு நுரையீரலை மட்டுல்ல இருதயத்தையும் பாதித்து அங்கும் பலவித நோய்களை உருவாக்குகிறது.

தொழிற்சாலைகள் பெருகி வரும் நாடுகளில் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் நுரையீரல் புற்று நோய் ஏற்பட காற்று மாசுபடுவதே காரணம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.புகையிலை மற்றும் அல்ட்ரா நீல கதிர்களாலும் நுரையீரல் புற்று நோய் உருவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவித்யா

aanthaireporter

shared via

Thursday, October 10, 2013

இன்று உலக கண்பார்வை தினம் world sight day

இன்று உலக கண்பார்வை தினம்:கொழும்பு கண் ஆஸ்பத்திரியில் விசேட நிகழ்வுகள்

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday

இலங்கையில் 1,50,000 பேர் பார்வை இழந்தவர்களாகக் காணப்படுவதுடன், பாடசாலை மாணவர்களில் 4,50,000 பேர் பார்வை குறைந்தவர்களாக உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.இன்று உலக கண்பார்வை தினமாகும். உங்கள் கண்களை பரீட்சித்துக்கொள்ளுங்கள் என்ற தொனியில் இம்முறை பார்வை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது தொடர்பிலான பல்வேறு விழிப்புணர்வு செயற்றிட்டங்களை சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

உலகின் 6250 மில்லியன் சனத்தொகையில் 39 மில்லியன் பேர் பார்வை இழந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையைப்போன்ற வளர்முக நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
கண் வெண்படலம், நீரிழிவு போன்றவற்றால் ஏற்படும் கண்நோய்கள், க்ளோகோமா போன்ற நோயினாலும் கண்கள் பார்வை இழந்து போவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஆரம்பத்திலேயே நோய்களை இனங் கண்டு சிகிச்சை பெறுவதன் மூலம் பார்வை இழப்பைத் தடுத்துக் கொள்ள முடியும் எனவும் அமைச்சு தெரிவிக்கின்றது.

சர்வதேச செயற்திட்டமான விஷன் 2020 திட்டம் இலங்கையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கிணங்க நாடுமுழுவதிலும் கண் பார்வை, கண்நோய்கள் தொடர்பான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.இலங்கையில் 1,50,000 பேர் பார்வை இழந்தவர்களாகக் காணப்படுகின்றனர். பாடசாலை மாணவர்களில் 4 இலட்சத்து 50,000 பேர் கண்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சத்து 50,000 மாணவர்கள் பார்வை குறைந்த நிலையில் உள்ளனர்.

உலக பார்வை தினமான இன்றைய தினத்தில் கொழும்பு கண் ஆஸ்பத்திரியில் விசேட நிகழ்வுகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளன. அத்துடன் கண்நோய் பரீட்சிப்பு தொடர்பான விசேடபிரிவும் கண் இரசாயன கூடமும் அமைச்சரினால் திறந்து வைக்கப்படவுள்ளன.

The post இன்று உலக கண்பார்வை தினம்:கொழும்பு கண் ஆஸ்பத்திரியில் விசேட நிகழ்வுகள் appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

How to prevent Diabetes - சர்க்கரை நோய்

How to prevent Diabetes - சர்க்கரை நோய்

வருமுன் காப்பது எப்பட
by sumathisrini
New Tamil

இந்தியாவில் அதுவும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் சமூக அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் கட்டுப்பாடு மற்றும் பயிற்சி இல்லாததால் சர்க்கரை நோய் வருவது தவிர்க்க முயாததாகி விட்டது. சர்க்கரை நோய் என்பது ஒரு குழந்தை தன் தாயின் கருவில் இருக்கும்போதே மரபணுவின் மூலமாக தோன்றுகிறது.

அது 20 அல்லது 30 வயதில் சுற்றுப்புற சூழ்நிலை காரணங்களால் தூண்டப்பட்டு தன்னை வெளிப்படுத்துகிறது. சுற்றுப்புற சூழ்நிலை என்பது மனிதன் நினைத்தால் மாற்றிக் கொள்ள கூடிய ஒன்று ஆகும். சுற்றுப்புறச் சூழ்நிலையை வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்து கொள்வதன் மூலம் சர்க்கரை நோயை தவிர்க்கலாம் அல்லது தள்ளி போடலாம். மனிதனின் தோற்றத்துக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் எப்படி ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டோ அதுபோல் சர்க்கரை நோய்க்கும் வரலாறு உண்டு.

எகிப்து பிரமிடுகள் மூலம் அழியா புகழ் பெற்றுள்ள எகிப்தியரின் குறிப்புகளில் சர்க்கரை நோய் பற்றி கி.மு.1500ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த சஸ்ருத் என்ற மருத்துவ மேதை சர்க்கரை நோயை மதுமேகம் என தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நோய், சோம்பேறிகளுக்கும் எடை அதிகமாக இருப்பவர்களுக்கும் அதிகமாக உண்பவர்களுக்கும் இனிப்பு, கொழுப்பு உள்ளவர்களுக்கும் அதிகம் வருகிறது என அதில் கூறியுள்ளார்.

சர்க்கரை நோய் என்றால் என்ன?

நமக்கு சக்தியை தருவது குளுக்கோஸ் என்கிற சர்க்கரை சத்து. எந்த உணவு சாப்பிட்டாலும் குளுக்கோஸ் இயக்க சக்தியாக மாற்றி ரத்தத்தின் வழியாக எல்லா உறுப்புகளில் இருக்கும் செல்களுக்கும் எடுத்து செல்லப்படுகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை அப்படியே எடுத்து பயன்படுத்தி கொள்ள பல உறுப்புகளுக்கு தெரிவதில்லை. இதற்கு இன்சுலின் என்ற ஒரு இயக்குநீர்(ஹார்மோன்) தேவைப்படுகிறது.

அதாவது இன்சுலின் உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சக்தியாக மாற்றித் தருகிறது. இந்த இன்சுலினை உற்பத்தி செய்வது பான்கிரியாஸ் என்ற கணையச் சுரப்பி, குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அந்த சுரப்பியில் இருக்கும் பீட்டா செல்கள் ஆகும். இன்சுலின் உற்பத்தி உடலில் சீராக நடைபெறும்போது எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை.

ரத்தத்தில் சர்க்கரை அளவும் 80-120 மில்லி கிராம் அளவுக்குள் இருக்கிறது. ஆனால் இன்சுலின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படும்போது உடல் உறுப்புகளின் செல்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்தி கொள்ளாமல் உடல் இயக்கத்துக்கு போதிய சக்தி கிடைக்காமல் போகிறது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை கூடுகிறது. ரத்த தில் ஒரு குறிப்பிட்ட அளவை சர்க்கரை தாண்டும்போது கூடுதல் சர்க்கரையை வெளியேற்றியே ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

இந்த பிரச்னையை தடுக்கிறேன் என்று சிறுநீரகம், உடல் தேவைக்கு அதிகமாகவே சிறுநீர் மூலம் சர்க்கரையை வெளியேற்றுகிறது. இந்த நிலை நீடிக்கும்போது உடலில் பல செல்கள் செயலிழந்து விடுகின்றன. இதனால் தான் சர்க்கரை நோயாளிக்கு களைப்பும், அசதியும் அதிக தண்ணீர் தாகமும் ஏற்படுகின்றது. சிறுநீர் மூலம் சக்தியை இழப்பதால் நீர் இழப்பு என்பது நீரழிவு நோய் ஆயிற்று.


Show commentsOpen link

Tuesday, October 8, 2013

How Tipu Sultan supported the French and where did Chidambaram Nataraja go to safe haven?

How Tipu Sultan supported the French and where did Chidambaram Nataraja go to safe haven?

by tnkesaven

தமிழகம் ஆங்கிலேயர்களாலும் பிரஞ்சுக்காரர்களாலும் பங்கு போடப்பட்டுக் கொண்டிருந்த நேரம். ஒவ்வொரு சுதேசி மன்னர்களும் இவ்விருவர் அணியிலும் பிரிந்து நின்ற அவலம்.
திப்பு சுல்தான் பிரஞ்சுக்காரர்களுக்காக சிதம்பரம் நகரை முற்றுகையிட்டான். அந்நியர் படையெடுப்பு எப்பொழுதுமே ஆலயங்களைக் குறிவைத்தே நடத்தப்படுவதால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலிருந்த ஆடல் வல்லானின் ஐம்பொன் சிலை பாதுகாப்பு பெரிய விஷயமாகப்பட்டது.
கோயிலில் பணிபுரிந்த "வைப்பி' என்னும் தேவதாசி தான் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாய் ஆறுதல் கூறி கோயிலாரின் அனுமதி பெற்று, நடராஜர் விக்கிரகத்தை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்றாள். தன் குடியிருப்பை ஒட்டிய புளியந்தோப்பிலுள்ள ஒரு புளியமரப்பொந்தில் நடராஜரை மறைத்து வைத்து பொந்தை முட்செடிகளால் மூடி வைத்தாள். பின்னர் அதன் வாயிலில் பசிய தழைகளைச் சார்த்தி, இலை மீது மஞ்சள் விழுது பூசி மறைத்தாள்.
தினசரி இம்மரத்தை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டாள். அவள் வழிபாட்டை எவரும் சந்தேகிக்கவில்லை. சில மாதங்களில் வைப்பி இறந்து போனாள்.
படையெடுப்பு முடிந்து திப்பு சுல்தான் சிதம்பரத்தை விட்டுத் திரும்பிச் சென்றதும் கோயில் நிர்வாகிகள் வைப்பியைத் தேடினர். அவள் இறந்துபோனதை அறிந்து திகைத்தனர். ஆனால் அவள் தினம் ஒரு புளியமரத்திற்குப் பூசை செய்த விவரத்தை அங்கிருந்தோர் கூற கோயிலார் அந்த மரத்தை ஆராய்ந்தனர்.
நடராஜர் சிலை இருக்குமிடம் தெரிந்தது. வைப்பியின் தியாகத்தையும் கடமையுணர்ச்சியையும் புகழ்ந்து கோயிலார் நடராஜரை மீண்டும் கோயிலுக்குக் கொண்டு வந்து பூஜை செய்தனர்.
அன்றிலிருந்து வைப்பி வாழ்ந்த இடம் "வைப்பி சாவடி' என்றும் அந்தப் புளியமரம் "அம்பலப்புளி' என்றும் அழைக்கப்பட்டன. இந்தத் தகவலை டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் குறிப்பிடுகின்றார்.

courtesy;''வரலாற்றில் தேவதாசிகள்'-'சி.எஸ்.முருகேசன்.'

Show commentsOpen link

Monday, October 7, 2013

செவ்வாய்க் கிரகத்தில் எரிமலைகள் valcanoes on mars

செவ்வாய்க் கிரகத்தில் எரிமலைகள்

by தமிழ் உலகம்

செவ்வாய்க் கிரகத்தில் மனிதனை குடியேற்றும் முகமாக நீர் இருப்பதையும், ஏனைய வளங்களையும் கண்டறியும் ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
 அதாவது Supervolcanoes எனப்படும் எரிமலைகள் இருப்பதற்கான ஆதாரப் புகைப்படங்கள் கிடைத்துள்ளதாக
விஞ்ஞானிகள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர். 
 மேலும் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு செவ்வாயில் இடம்பெற்றிருக்கலாம் என நம்புவதாக Michalski எனும் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.




Show commentsOpen link

Sunday, October 6, 2013

யு ட்யூப்பில் படங்களை டவுன்லோட் செய்திட சிறந்த வழி... how to download youtube videos

யு ட்யூப்பில் படங்களை டவுன்லோட் செய்திட சிறந்த வழி...

by Marikumar
டிப்ஸ்Yesterday,

யு ட்யூப் தளத்தில் வீடியோ படங்களை டவுண்லோட் செய்திடச் செல்கையில், பல தர்ட் பார்ட்டி புரோகிராம்களால் பிரச்னை ஏற்படுகிறது. தர்ட் பார்ட்டி புரோகிராம் இல்லாமல், யு ட்யூப் தளத்தில் இருந்தவாறே தரவிறக்கம் செய்திட முதலில் நீங்கள் தரவிறக்கம் செய்திடும் யு ட்யூப் வீடியோ உள்ள பக்கத்தைத் திறக்கவும்.

பின்னர் அதன் முகவரியைக் கவனிக்கவும். அதில் www.youtube.com/watch ?v=xxxxxxx என இருக்கும்.

இனி, youtube என்பதன் முன்னால் ssஎனச் சேர்க்கவும்.

முகவரியில் youtube என்பது ssyoutube என மாறி இருக்கும். இப்போது என்டர் பட்டனை அழுத்தவும்.

இப்போது புதியதாக http://en.savefrom.net/ என்ற முகவரியில் உள்ள தளம் திறக்கப்படும்.

இதில் நீங்கள் விரும்பும் வீடியோ பைல் எந்த பார்மட்டில் பதியப்பட வேண்டும் என்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப் பட்டிருக்கும்.

உங்களுக்குத் தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து டவுண்லோட் செய்திட கட்டளை கொடுத்தால், உடன் வீடியோ பைல் பதிவு செய்யப்படும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் அடிப்படையில், பதியும் நேரம் வேறுபடலாம்.

இந்த இடத்தில் யு ட்யூப் தளத்தில் இருந்து வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட உதவும், ஆன்லைன் தளங்களின் பெயர்களையும் தருகிறேன்.

விருப்பப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாமே.

அவை

http://www.keepvid.com
http://www.videodownloadx.com
http://www.vdownloader.es
http://boomvid.com
http://www.zilltube.com
http://www.tubeg.com

மேலே சொல்லியவாறு, நீங்கள் டவுண்லோட் செய்ய வேண்டிய வீடீயோ பைல் உள்ள யு-ட்யூப் தளப் பக்கம் செல்லவும். அதன் யு.ஆர்.எல், முகவரியை காப்பி செய்து கொண்டு, பின் மேலே குறிப்பிட்டுள்ள தளங்களில் ஒன்றுக்குச் சென்று, அங்கு தரப்பட்டுள்ள கட்டத்தில், முகவரியை பேஸ்ட் செய்திடவும்.

அடுத்து, உங்கள் வீடியோ பைலை நீங்கள் எந்த பார்மட்டில் பெற விரும்புகிறீர்கள் என்ற ஆப்ஷனைத் தேர்வுச் செய்து எண்டர் தட்டவும். நீங்கள் தேர்ந்தெடுத்த டைரக்டரி அல்லது போல்டரில், வீடியோ பைல் டவுண்லோட் ஆகும்.
Share |

Show commentsOpen link

Saturday, October 5, 2013

உலகின் டாப் 10 வெப்சைட்ஸ்!!! Top ten websites

உலகின் டாப் 10 வெப்சைட்ஸ்!!!

by Marikumar

இனி வரும் தலைமுறையினர் இணையம் இல்லாமல் இருக்க போவதில்லை எனலாம் ஏன் நாமே ஒரு நாள் இணையத்தை பயன்படுத்தாவிட்டால் அவ்வளவுதான்.

மேலும், நாளுக்கு நாள் நாம் பயன்படுத்தும் இணையத்தின் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது எனலாம் இன்று இணையம் இல்லாத உலகே இல்லை என்றே கூறலாம்.

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது என்று கேட்டால் கண்களை மூடிக் கொண்டு கூகுள் என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை.

அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில் யார் என்று கேட்பீர்கள் நிச்சயம் அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான்.

இங்கே இந்த வகையில் அதிக யூஸர் அக்கவுண்ட்களை கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் சிறப்புகளையும் காணலாம் இப்பொழுது பாருங்கள் யார் முதலிடம் என்று....

பேஸ்புக் தளம் தான், உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் தனிநபர் வாடிக்கையாளர்களைக் கொண்டதாக இயங்கி வருகிறது.

கூகுள் 78 கோடியே 28 லட்சம் பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்டது இந்த தேடுதல் தளம்

யூடியுப் 2006ல் இதனை கூகுள் நிறுவனம் தனதாக்கிக் கொண்டு, தொடர்ந்து பல வசதிகளை அளித்து வருகிறது. இதன் தனி நபர் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 72 கோடியே 19 லட்சம்.

யாஹூ இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 46 கோடியே 99 லட்சம்.

விக்கிபிடியா 46 கோடியே 96 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது. இலவசக் கலைக் களஞ்சியமாக இயங்கி வருகிறது.

லைவ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இமெயில் தளம். அவுட்லுக் மற்றும் ஹாட் மெயில் தளங்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டது. இதன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 38 கோடியே 95 லட்சம்.

கியூகியூ(QQ)இது சீனாவில் முதல் நிலைத் தளமாக உள்ளது. இந்த வகையில் 70 கோடி பேர் இதில் உள்ளனர்.

மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த தளம். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 27 கோடியே 17 லட்சம்.

பைய்டு (Baidu) வெப்சைட், ஆடியோ பைல்கள், இமேஜஸ் ஆகியவற்றைத் தேடிப் பெற சீனா கொண்டுள்ள இணைய தளம் இது. ஆயிரக்கணக்கான சீனப் பொறியாளர்கள், தொடர்ந்து இதன் தகவல்களை அப்டேட் செய்து வருகின்றனர். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 26 கோடியே 87 லட்சம்.

எம்.எஸ்.என் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டுள்ள இணைய வசதிகளில் இதுவும் ஒன்று. இணைய சேவை நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, ஹாட்மெயில், எம்.எஸ். என். மெசஞ்சர் ஆகியவற்றைக் கொண் டுள்ளது. போர்டல் தளமாக இயங்குகிறது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 25 கோடியே 41 லட்சம்.
Thatstamil
Share |

Show commentsOpen link

Friday, October 4, 2013

சென்னையில் 24 மணிநேரமும் இயங்கும் சில மெடிக்கல்களும் அவற்றின் தொலைபேசி 24 hours medical numbers

சென்னையில் 24 மணிநேரமும் இயங்கும் சில மெடிக்கல்களும் அவற்றின் தொலைபேசி

by admin
Tamil news, Tamil culture, செய்திகள் ...
தெரிந்து கொள்வோம .

சென்னையில் 24 மணிநேரமும் இயங்கும் சில மெடிக்கல்களும் அவற்றின் தொலைபேசி எண் மற்றும் முகவரி.

அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்….

அப்பல்லோ பார்மஸி
449, திருவொற்றியூர் ஹைரோடு,
வண்ணாரப்பேட்டை.
போன்: 044-42078585.

அன்னை பார்மஸி
3, சரஸ்வதி நகர், முதல் மெயின் தெரு,
திருவொற்றியூர்.
போன்: 044-25740521.

அப்பல்லோ பார்மஸி
645, திருவொற்றியூர் ஹைரோடு,
தண்டையார்பேட்டை.
போன்: 044-25913333.

அம்ருதா பார்மஸி
12, ஜாபர் ஷெரங் தெரு,
பாரிமுனை.
போன்: 044-25240131.

அப்பல்லோ பார்மஸி
445, மின்ட் தெரு,
சவுகார்பேட்டை.
போன்: 044&25295999.

அப்பல்லோ பார்மஸி
74, என்எஸ்சி போஸ் ரோடு,
சவுகார்பேட்டை.
போன்: 044-25330832.

ஸ்ரேயா மெடிக்கல்ஸ்
924, எல்லையம்மன் கோயில் தெரு,
டிஎச் ரோடு, திருவொற்றியூர்.
போன்: 044-25995234.

பாவா மெடிக்கல்ஸ்
2, 38வது தெரு,
கொளத்தூர் மெயின் ரோடு,
ஜிகேஎம் காலனி.
போன்: 044-66424804.

ஆனந்த் ஹாஸ்பிடல்
201, காமராஜர் சாலை,
மணலி.
போன்: 044-25942900.

ஆர்.எஸ்.மெடிக்கல்ஸ்
6, எம்ஆர் நகர்,
தண்டையார்பேட்டை ஹைரோடு,
கொடுங்கையூர்.
போன்: 044-25581865.

அபிராமி மெடிக்கல்ஸ்
9/2, எஸ்ஆர்பி கோயில் தெரு,
பெரியார் நகர்.
போன்: 044-26703888.

ஈஸ்வர் மெடிக்கல் பவுண்டேஷன்
1, பாரதி நகர், ரெட்ஹில்ஸ் ரோடு,
கொளத்தூர்.
போன்: 044-26710351.

தகவல் – தினகரன்

The post சென்னையில் 24 மணிநேரமும் இயங்கும் சில மெடிக்கல்களும் அவற்றின் தொலைபேசி appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

Excel Functions..எக்ஸெல் பங்சன்கள்

Excel Functions..எக்ஸெல் பங்சன்கள்

by silentsounds
New
Excel Functions-எக்ஸெல் பங்சன்கள்

பங்சன் என்பது எக்ஸெல் தொகுப்பு ஏற்கனவே உருவாக்கிய பார்முலாவினைக் குறிக்கிறது. எக்ஸெல் தொகுப்பில் இது போல பல பார்முலாக்கள் உள்ளன. அவற்றை நேரடியாக நாம் பயன்படுத்தலாம். அத்தகைய பொதுவான பங்சன்களில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. Sum: இந்த பங்சன் என்ன செய்கிறது? வரிசையாகத் தரப்படும் டேட்டாக்களைக் கூட்டுகிறது.

இதனைப் பயன்படுத்தும் விதம்: =SUM(A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள டேட்டாக்கள் கூட்டப்படுகின்றன. இந்த பங்சனில் உள்ள பார்முலாவை எந்த செல்லில் அமைக்கிறீர்களோ அந்த செல்லில் இந்த கூட்டுத்தொகையின் மதிப்பு பதியப்படும்.

2. Average: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களின் சராசரியைக் கணக்கிட்டு தருகிறது.

இதனைப் பயன்படுத்தும் விதம்: =AVERAGE(A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள எண்களின் சராசரி கணக்கிடப்பட்டு, அதாவது A1 முதல் A4 வரையிலான எண்கள் கூட்டப்பட்டு கூட்டுத் தொகை 4ஆல் வகுக்கப்பட்டு தரப்படும். இந்த பார்முலா எந்த செல்லுக்கென எழுதப்பட்டுள்ளதோ அந்த செல்லில் பதியப்படும்.

3.Max: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது அதிக மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும்.

இதனைப் பயன்படுத்தும் விதம்: =MAX(A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது பெரிய எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

4. Count: கொடுக்கப்பட்டுள்ள செல்களில் எத்தனை செல்களில் மதிப்பு தரப்பட்டுள்ளது எனக் கணக்கிடப்பட்டு அந்த மதிப்பு பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

இதனை அமைக்கும் விதம் =COUNT(A1:A4)

5. Min: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும்.

இதனைப் பயன்படுத்தும் விதம்: =Min (A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்பு கொண்ட எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

6. Round: செல்லில் உள்ள மதிப்பு ஒன்றினை நாம் அமைத்திடும் தசம ஸ்தான அளவில் வரையறை செய்து அளிக்கும்.

இதனை அமைத்திடும் விதம் =ROUND(A1,2) இந்த பார்முலாவில் செல்லில் உள்ள மதிப்பை எடுத்து அதனை இரண்டு தசம ஸ்தானத்திற்கு மாற்றித்தரும்.

மேலே தரப்பட்டிருக்கும் எடுத்துக் காட்டுக்களில் செல்களின் எண்களாக நமக்குத் தேவைப்படும் செல்களின் எண்களைத் தரலாம்.

Show commentsOpen link

Thursday, October 3, 2013

Pineapple : A wonderful Fruit

Pineapple : A wonderful Fruit

by krushrikrish
New Tamil

Pineapple has Bromelain, a proteolytic enzyme. Proteolytic means "breaks down protein",

The pineapple is a member of the bromeliad family.

It is extremely rare that bromeliads produce edible fruit. The pineapple is the only available edible bromeliad today.

It is a multiple fruit. One pineapple is actually made up of dozens of individual floweret's that grow together to form the entire fruit. Each scale on a pineapple is evidence of a separate flower.

Pineapples stop ripening the minute they are picked. No special way of storing them will help ripen them further.
Colour is relatively unimportant in determining ripeness. Choose your pineapple by smell.If it smells fresh, tropical and sweet, it will be a good fruit.

The more scales on the pineapple, the sweeter and juicier the taste.

The juice has an anthelmintic effect; it helps get rid of intestinal worms.

Pineapple is high in manganese, a mineral that is critical to development of strong bones and connective tissue. A cup of fresh pineapple will give you nearly 75% of the recommended daily amount.

Proteolytic means "breaks down protein", which is why pineapple is known to be a digestive aid. It helps the body digest proteins more efficiently.

Bromelain is also considered an effective anti-inflammatory.

Regular ingestion of at least one half cup of fresh pineapple daily is purported to relieve painful joints common to osteoarthritis.

Fresh pineapple is not only high in this vitamin, it has the ability to reduce mucous in the throat.

If you have a cold with a productive cough, add pineapple to your diet.

Pineapple is also known to discourage blood clot development. This makes it a valuable dietary addition for frequent fliers and others who may be at risk for blood clots.

It's also good for a healthier mouth. The fresh juice discourages plaque growth.

Show commentsOpen link

Wednesday, October 2, 2013

பீகாரில் 405 அடி உயர கோபுரத்துடன் உலகின் மிகப்பெரிய கோயில் கட்ட ஏற்பாடு 405 feet towering temple to be built in Bihar

பீகாரில் 405 அடி உயர கோபுரத்துடன் உலகின் மிகப்பெரிய கோயில் கட்ட ஏற்பாடு 405 feet towering temple to be built in Bihar

Tamil NewsYesterday, 05:30

பாட்னா, அக்.3-

பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் 405 அடி உயர கோபுரத்துடன் உலகின் மிகப்பெரிய இந்து கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமான பணிக்கான பூமி பூஜை, துர்கா பூஜை தினத்தன்று (11ம் தேதி) நடத்தப்படுகிறது.

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 125 கி.மீட்டர் தூரத்தில் அமையவுள்ள இந்த கோயிலுக்கு விரட் ராமாயண் மந்திர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோயிலை நிர்மாணிக்கும் பணியை செய்து வரும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குனால் கூறியதாவது:-

இந்த கோயிலை கட்டுவதற்காக 190 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை சமன்படுத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டது. ரூ.500 கோடி செலவில் கட்டப்படும் இந்த கோயிலின் வளாகத்தில் சிவாலயம் உள்பட 18 சிறிய ஆலயங்கள் அமைக்கப்படும்.

சிவாலயத்துக்கள் உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் உருவாக்கப்படும். 20 ஆயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் அமரும் வகையில் பிரமாண்டமான அரங்கமும் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கம்போடியா நாட்டில் இந்து மன்னர் சூர்யவர்மனால் கட்டப்பட்ட அங்கோர்வாட் கோயில் 215 அடி உயரம் கொண்டது. இந்த கோயிலை உலகின் புராதாண சின்னங்களுள் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

பீகாரில் கட்டப்பட உள்ள இந்த புதிய கோயில் அங்கோர்வாட் கோயிலைவிட 2 மடங்கு உயரம் கொண்டதாக உருவாகலாம் என தெரிகிறது.

(படத்தில் காணப்படுவது கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயில் ஆகும்)
...
Show commentsOpen link

Tuesday, October 1, 2013

அடிக்கடி தலைவலி வருகிறதா – நம்ம பாட்டி வைத்தியத்தை முயற்சிக்கலாமே ! Head ache solution

அடிக்கடி தலைவலி வருகிறதா – நம்ம பாட்டி வைத்தியத்தை முயற்சிக்கலாமே !!
by admin
Tamil news, Tamil culture, செய்திகள் ...
 

1. கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

நல்லெண்ணெய்              கற்பூரவல்லி இலை               சர்க்கரை
தேவையான பொருட்கள்:

கற்பூரவல்லி இலைச்சாறு.
நல்லெண்ணெய்.
சர்க்கரை.
செய்முறை:
கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

 

2. மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.

மகிழம்பூ                             சோம்பு                                ரோஜாபூ
தேவையான பொருட்கள்:

மகிழம்பூ
சுக்கு.
சீரகம்.
சோம்பு.
ரோஜாப்பூ.
ஏலக்காய்.
அதிமதுரம்.
சித்தரத்தை
தேன்.
செய்முறை:
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.

The post அடிக்கடி தலைவலி வருகிறதா – நம்ம பாட்டி வைத்தியத்தை முயற்சிக்கலாமே !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link