Monday, November 4, 2013

கடல் மற்றும் தரையில் ஓடும் நவீன கார் மூலம் 60 ஆயிரம் கி.மீட்டர் பயணித்து உலகை சுற்றும் முயற்சி துவக்கம் Estonia man to trip world through Amphibian car

கடல் மற்றும் தரையில் ஓடும் நவீன கார் மூலம் 60 ஆயிரம் கி.மீட்டர் பயணித்து உலகை சுற்றும் முயற்சி துவக்கம் Estonia man to trip world through Amphibian car

லண்டன், நவ.4-

எதிரிகள் காரில் விரட்டிக்கொண்டு வரும்போது விர் என்று ஆற்றுக்குள் பாய்ந்து காரை படகாக்கி ஜேம்ஸ் பாண்ட் செய்யும் சாகசங்களை சினிமாவில் மட்டுமே பார்த்திருப்போம்.

இந்த காட்சிகளை நிஜமாக்கும் நவீன காரை டொயோட்டா நிறுவனம் லேண்ட் க்ரூசியர் என்ற பெயரில் தயாரித்துள்ளது.

வட ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்டோனியாவை சேர்ந்த மெய்ட் நிப்சன்(44) என்பவர் இந்த காரின் மூலம் கடல் மற்றும் தரை வழியாக 60 ஆயிரம் கி.மீட்டர் பயணித்து 9 மாதங்களில் உலகை சுற்றிவரும் சாகச பயணத்தை கடந்த சனிக்கிழமை தொடங்கினார்.

4 x 4 மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கார், நீரில் பயணிக்கும் போது 10 மீட்டர் உபஇணைப்பு கொண்ட படகாக மாறிவிடும். இதற்காக சுமார் 200 மணி நேரம் கடலில் ஒத்திகை பயணத்தை நடத்தியுள்ள மெய்ட் நில்சன் நேற்று முன்தினம் டெய்லின் இருந்து தனது சாகச பயணத்தை தொடங்கினார்.

எஸ்டோனியா, லட்வியா, விதுவேனியா, போலாந்து, ஸ்லோவேக்கியா, ஸ்லோவேனியா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், மொராக்கோ, மவுரிடானியா, செனெகல், வெட்டே வளைகுடா, பிரேசில், அர்ஜெண்டினா, சிலி, பெரு, கொலம்பியா, பனாமா, நிகாராகுவா, ஹொன்டுராஸ், கவுடெமாலா, மெக்சிக்கோ, அமெரிக்க, கனடா மற்றும் ரஷ்யா வரியாக 60 ஆயிரம் கி.மீட்டர் தரை வழியாகவும், கடல் மற்றும் ஆறுகள் மார்க்கமாக சுமார் 9 மாதங்கள் பயணித்து மீண்டும் அவர் எஸ்டோனியா வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

...

shared via

No comments:

Post a Comment