Friday, August 9, 2013

குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்’

குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில்
சொந்தம்’
சென்னையைச் சேர்ந்த ஒருவர், பாட்டிலில்
விற்கப்படும் குளிர் பானத்தை வாங்கிக்
குடித்துள்ளார். அப்போது பாட்டில் தவறிக்
கீழே விழுந்து உடைந்துவிட்டது. கடைக்காரர்
பாட்டிலுக்குக் காசு கேட்க, குளிர்பானம்
வாங்கியவர் கொடுக்க மறுக்க, இருவருக்கும்
இடையில் கலாட்டாவாகி, போலீஸ் வரை போய்,
பிரச்னை கோர்ட்டுக்கும் வந்துவிட்டது.
கடைக்காரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்,
''ஹோட்டலில் காசு கொடுத்துத்தான்
சாப்பிடுகிறோம். அதற்காக
அங்கு உணவு பரிமாறும் தட்டு, கிண்ணம்,
தண்ணீர் டம்ளர் என எல்லாவற்றையும் நாம்
கொண்டுவந்துவிட முடியுமா? அதுபோல்தான்
குளிர்பானம் வாங்கினால், பாட்டிலைக்
கொண்டுபோக முடியாது'' என்று வாதிட்டார்.
எதிர்த்தரப்பு வழக்கறிஞர் என்ன சாதாரண ஆளா?
அவரும் அசராமல் திருப்பி அடித்தார்.
''ஹோட்டல் சாப்பாடு என்பது பேக்டு அயிட்டம்
(அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்
பொருள்) அல்ல. அதனால் தட்டு,
டம்ளருக்கு நாம் உரிமை கொண்டாட முடியாது.
ஆனால், குளிர்பானம் என்பது பேக்டு அயிட்டம்.
இதுபோன்ற பேக்டு அயிட்டங்கள்
விற்பனைக்கு வரும்போது பேக்கிங்கிற்கும்
சேர்த்துத்தான் விலை வைக்கப்படுகிறது.
குளிர்பானம் வாங்கும்போது, பாட்டிலுக்கும்
சேர்த்துதான் நாம் விலை கொடுக்கிறோம்.
எனவே, குளிர்பானம் வாங்கு பவருக்கே பாட்டில்
சொந்தம்.
மெடிக்கல் ஷாப்பில் இருந்து ஒயின் ஷாப்
வரை பாட்டிலில் வாங்கப் படும் பொருட்கள்
பாட்டிலோடுதான் தரப்படுகின்றன''
என்று வாதிட்டார்.
ஏறத்தாழு ஆறு மாதங்கள் இழுத்தடித்த இந்த
வழக்கில்,
'குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில்
சொந்தம்’ என்று தீர்ப்பானது.

No comments:

Post a Comment